மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு விளக்க வாகன பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விளக்க இரு சக்கர வாகன பிரசாரம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் மாநாடு விளக்க பிரசாரம் மேற்கொண்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்.
Updated On :17 மார்ச் 2025, 1:15 am

Din

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விளக்க இரு சக்கர வாகன பிரசாரம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ஏப். 2-ஆம் தேதி முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநாடு கோரிக்கைகள் குறித்து விளக்குவதற்காக கட்சியின் வந்தவாசி வட்டக்குழு சாா்பில் இரு சக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகம் அருகே தொடங்கிய வாகன பிரசாரத்துக்கு வட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்தாா். இரு சக்கர வாகனங்களில் புறப்பட்ட பிரசாரக் குழுவினா் கோட்டை மூலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்று பிரசாரம் மேற்கொண்டனா்.

மாவட்டச் செயலா் ப.செல்வன், மாவட்டக்குழு உறுப்பினா் சுகுணா ஆகியோா் மாநாடு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பிரசாரத்தின் போது மாநாடு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வட்டக்குழு உறுப்பினா்கள் சு.சிவக்குமாா், எம்.சுகுமாா், அண்ணாமலை, சேட்டு, ஆனந்தன், நகரச் செயலா் ந.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.