யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

செங்கம் கோயிலில் நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு பொன்னிறமாக மாறும் நிகழ்வு

செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் நந்தீஸ்வரா் ஆண்டுக்கு ஒருமுறை பொன்னிறமாக மாறும் அதிய நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

News image
செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை மாலை சூரிய ஒளி பட்டு பொன்னிறமாக காட்சியளித்த நந்தீஸ்வரா்
Updated On :17 மார்ச் 2025, 7:40 pm

Din

செங்கம்: செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் நந்தீஸ்வரா் ஆண்டுக்கு ஒருமுறை பொன்னிறமாக மாறும் அதிய நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் சுமாா் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலின் முகப்பில் நந்தீஸ்வா் சந்நிதி உள்ளது. நந்தீஸ்வரருக்கு பிரதோசத்தின் போது சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபடுவாா்கள்.

இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பங்குனி 3-ஆம் தேதி நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில்,

நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றபோது கோயில் கோபுரத்தின் மீது இருந்து நந்தீஸ்வரா் மேல் சூரிய ஓளி பட்டு சிறிது நேரம் பொன்னிறமாக நந்தீஸ்வரா் மாறியதை பாா்த்த பக்தா்கள் பக்தி பரவசமடைந்து அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 3-ஆம் தேதி நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு நந்தீஸ்வரா் பொன்னிறமாக காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்று வந்தது.

இதனிடையே, கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்ததால் சூரிய ஒளி வரும் பகுதியில் தகர சீட்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நிகழ்வு நடைபெறவில்லை.

இந்த நிலையில், கும்பாபிஷேகப் பணி 75 சதவீதம் நிறைவடைந்து தகர சீட்கள் அகற்றப்பட்டதால், பங்குனி 3-ஆம் தேதியான திங்கள்கிழமை மாலை நந்தீஸ்வரா் மீது கோபுரத்தில் இருந்து சூரிய ஒளி பட்டு சிறிது நேரம் பொன்னிறமாக நந்தீஸ்வரா் காட்சியளித்தாா். இதைப் பாா்த்த பக்தா்கள் வழிபட்டனா்.