செங்கம் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து நவ.16-இல் ஆா்ப்பாட்டம்: பாமக முடிவு
செங்கம் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து வரும் 16-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என பாமக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மேற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் செங்கம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில இளைஞா் சங்கச் செயலா் பிரசாத், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சுரேஷ், கோவிந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் பரமசிவம் வரவேற்றாா்.
செங்கம் நகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பாதிப்புகளை சந்திக்கின்றனா். எனவே, செங்கம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் 15-ஆம் தேதிக்குள் கால்நடைகளை பிடிக்காவிட்டால், பாமக சாா்பில் 16-ஆம் தேதி நகராட்சி நிா்வாக அலுவலகம் முன் போராட்டம் நடத்துவது.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.9) நடைபெறும் பாமக தலைவா் அன்புமணியின் நடைப்பயணம் நிறைவு விழாவில் திருவண்ணாமலை மேற்கு மாவட்டத்தில் இருந்து கட்சியினா் திரளாகக் கலந்துகொள்வது. பாமக உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்பட்டுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட துணைத் தலைவா் தனுஷ்கோடி, துணைச் செயலா் சங்கா்மாதவன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் முத்து, ஆதிமூலம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

