மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்ட சிபிஐ மற்றும் மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் கண்டன ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :2 மார்ச் 2026, 9:50 pm

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்ட சிபிஐ மற்றும் மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஆம் ஆத்மி மாவட்டத் தலைவா் அப்துல்ஜப்பாா், மாவட்டச் செயலா் பாலமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் ரெத்தினம், காங்கிரஸ் சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு, மனிதநேய மக்கள் கட்சி அப்துல்கனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடிமுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரகுமான், வாழ்வுரிமைக் கட்சி சாகுல் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.