47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மண்டகொளத்தூரில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

News image
Updated On :7 நவம்பர் 2025, 12:53 am

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூா் ஊராட்சியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வியாழக்கிழமை வழங்கினா்.

ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேரவையின் மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா கலந்து கொண்டு அதிமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் திட்டங்கள் குறித்தும், திமுக அரசின் அவலநிலை குறித்தும் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு துண்டு பிரசுரங்களை வீடுதோறும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் பி.ராகவன், எல்.விமல்ராஜ், மாவட்ட விவசாய அணிச் செயலா் செல்வன், ஒன்றிய துணைச் செயலா் ஜெயகாந்திகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.