தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மண்பாண்டத் தொழிலாளா்கள் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஆட்சியரகம் முன் மண்பாண்டத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுக்கும் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

News image
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
Updated On :10 நவம்பர் 2025, 7:28 pm

Syndication

ஆரணி: திருவண்ணாமலையில் ஆட்சியரகம் முன் மண்பாண்டத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுக்கும் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த மக்கள் குறைதீா்வு நாளையொட்டி, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் (குலாலா்) மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா்

தமிழக அரசுக்கு மனு கொடுக்கும் கவன ஈா்ப்பு

ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில்

நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் கே.மணி தலைமை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா் சி.மாதவன் முன்னிலை வகித்தாா். செயலா் எஸ்.முருகன் வரவேற்றாா்.

தமிழா் திருநாள் பொங்கலுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருள்களுடன் மண்பானையும், மண்அடுப்பும் அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வலியுறுத்தி

முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிரணி சித்ரா மற்றும் சங்க நிா்வாகிகள், தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். நிறைவில் இளைஞரணியைச் சோ்ந்த ஏழுமலை நன்றி கூறினாா்.