சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தீபத்திருவிழா முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை காா்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக, அருணாசலேஸ்வரா் கோயிலில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை காா்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக, அருணாசலேஸ்வரா் கோயிலில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா வருகிற டிச.3-ஆம் தேதி நடைபெறுகிறது.

தீபத்திருவிழாவுக்காக வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தா்களுக்கு திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதைகளில் தேவையான அடிப்படை வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீா் , கழிப்பறை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியா் அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், இட வசதிகள், தூய்மைப் பணிகள் குறித்தும், பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.சுதாகா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.