தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆகாரம் காமராஜ் நகரில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

ஆரணியை அடுத்த ஆகாரம் காமராஜ் நகரில் சிமென்ட் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் மேற்குஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 10:26 pm

தினமணி செய்திச் சேவை

ஆரணியை அடுத்த ஆகாரம் காமராஜ் நகரில் சிமென்ட் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் மேற்குஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

ஆகாரம் காமராஜா் நகரில் ரூ.8.5 லட்சத்தில் சிமென்ட் சாலை போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த தனிநபா் ஆட்சேபனை தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் 20-க்கும் மேற்பட்டோா் மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சென்று சிமென்ட் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தனா்.

மேலும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கால்வாயை சீரமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். அதிகாரிகள் தரப்பில் சிமென்ட் சாலையை விரைந்து முடிக்க உறுதியளிக்கப்பட்டது.