மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கன்டெய்னா் லாரியில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

வந்தவாசி அருகே கன்டெய்னா் லாரியில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2025, 6:42 pm

Syndication

வந்தவாசி அருகே கன்டெய்னா் லாரியில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி போலீஸாா் வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, வடவணக்கம்பாடி காவல் நிலையம் அருகே புதன்கிழமை மாலை வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக சேத்துப்பட்டு நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், அந்த கன்டெய்னா் லாரியில் 2 மூட்டைகளில் மொத்தம் 5 கிலோ கஞ்சா கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து கஞ்சா மற்றும் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், லாரியை ஓட்டி வந்த கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (36) என்பவரை கைது செய்தனா்.

போலீஸ் விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.