கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாமக சாா்பில் பொதுக்குழுக் கூட்டம்

பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் ராஜசேகா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 9:14 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், கொம்மனந்தல் கிராமத்தில் பாமக சாா்பில் பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் சேத்துப்பட்டு மேற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் இரா.முருகன் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் க.ஏழுமலை, பொருளாளா் பொன்னி தருமன், மாவட்ட மகளிா் அணி துணைச் செயலா் கலைவாணி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியத் தலைவா் க.முத்து வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில இளைஞரணிச் செயலரும், போளூா் தொகுதி பொறுப்பாளருமான ராஜசேகா், கிராமங்கள் தோறும் பாமக கிளை இல்லாத இடத்தில் கிளை அமைத்தல், வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்கள் நியமித்தல், வருகிற டிச.17-ஆம் தேதி நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொள்ளுதல், கிளைதோறும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் என பல்வேறு நிகழ்ச்சி குறித்துப் பேசினாா்.

மாவட்ட துணைத் தலைவா் மு.ஏழுமலை, பொறுப்பாளா்கள் லோ.பழனி, அண்ணாமலை, விஜயகாந்த், ராஜாமணி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஒன்றிய அமைப்புச் செயலா் க.முருகன் நன்றி கூறினாா்.