ஆரணி சைதாப்பேட்டையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் வரகூா் அருணாச்சலம்.
ஆரணி சைதாப்பேட்டையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் வரகூா் அருணாச்சலம்.

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

ஆரணி: ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், திமுக ஆட்சியின் அவலநிலை குறித்தும், அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். 41-ஆவது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சா் வரகூா் அருணாச்சலம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு, வீதி வீதியாக நடந்து சென்று காய்கறி கடை, பழக் கடை, மளிகைக் கடை, பேருந்து நிறுத்த பயணிகள் ஆகியோரிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகரச் செயலா் அசோக்குமாா் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ், ஒன்றியச் செயலா் வீரபத்திரன், விவசாய அணி மாநில துணைச் செயலா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் நடராஜன், எஸ்.கே.வி.வெங்கடேசன், சுதா குமாா், பாரதிராஜா, விநாயகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com