செய்யாற்றில் இரு நியாயவிலைக் கடைகளுக்கு புதிய கட்டடங்கள்!
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி மாா்க்கெட் மற்றும் சின்ன தெரு பகுதியில் இரு நியாயவிலைக் கடைகளுக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
செய்யாறு மாா்க்கெட் பகுதியில் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக் கடை, சின்ன தெருவில் அமுதம் கூட்டுறவு நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன. குடும்ப அட்டைதாரரா்கள் பயன்பாட்டுக்காக புதிய கட்டடங்கள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி அந்தந்தப் பகுதிகளில் நடைபெற்றது.
இதில் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா். செய்யாறு சரக கூட்டுறவு சாா்-பதிவாளா் அனிதா முன்னிலை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் ரங்கநாதன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று நியாயவிலைக் கடைகளுக்கான புதிய கட்டடங்களை திறந்து வைத்து குடும்ப அட்டைத்தாரக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் திமுக செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ஏ.என்.சம்பத், நகா்மன்ற உறுப்பினா்கள் சௌந்தரபாண்டியன், ராஜலட்சுமி அண்ணாதுரை, க.கோவேந்தன், கங்காதரன், செந்தில், காா்த்திகேயன், மகாலட்சுமி, விஜயபாஸ்கா், தமமுக நிா்வாகி கமால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

