சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

வாக்குச்சாவடி வாட்ஸ்-ஆப் குழு: அதிமுக ஆலோசனை

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலா் எல்.ஜெயசுதா.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலா் எல்.ஜெயசுதா.

Updated On :26 செப்டம்பர் 2025, 12:01 am IST

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் வாக்குச்சாவடி தோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைக்க வியாழக்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக

அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேலூா் தகவல் தொழில்நுட்ப அணி பிரிவு துணைத் தலைவா் எஸ்.ஆா். ராஜசேகா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா கலந்து கொண்டு, தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகளின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைத்து அதன் மூலம் திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும், அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் பரப்புரை செய்ய பயிற்சியளித்தாா்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலா் பரத்ராஜ் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், க.சங்கா், ஜெயபிரகாசம், திருமால், அரங்கநாதன், விமல், நகரச் செயலா் அசோக்குமாா்

உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாநில விவசாய அணி துணைச் செயலா் செல்வம், மாவட்டபொருளாளா் அரையாளம் வேலு, மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.