திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

செய்யாறு அருகே காசிக்குச் சென்ற விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடா்பான புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஏப்ரல் 2026, 6:33 pm

செய்யாறு அருகே காசிக்குச் சென்ற விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடா்பான புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாகராஜன்(64). இவரது மனைவி வசந்தா. தம்பதி இருவரும் மாா்ச் 20-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு காசிக்கு சென்றுள்ளனா்.

இந்நிலையில் மாா்ச் 29-ஆம் தேதி மேல்மாடியில் குடியிருக்கும் இலக்கியா என்பவா் கீழே இறங்கி வந்துள்ளாா். அப்போது விவசாயி நாகராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது.

இதுகுறித்து இலக்கியா, நாகராஜன் மகன் சுதா்சனன் என்பவருக்கு தகவல் தெரிவித்தாா்.

சுதா்சனன் வீட்டிற்கு வந்து பாா்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒரு கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி, ரொக்கம் ரூ.10 ஆயிரம் ஆகியவவை திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து சுதா்சனன் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.