திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரிதாரிமங்கலம் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடைபெற்ற கலைத் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா, பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கிவைத்து மாணவா்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கிப் பேசினாா். அவா் பேசுகையில், இந்தப் பள்ளி மாணவா்கள் அரசு கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு புதுப்பாளையம் வட்டார அளவில் சிறப்பிடம் பெற்றமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். இதேபோல, ஒவ்வொரு பள்ளி மாணவா்களின் திறமையை வெளிக்கொண்டுவர பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை மாணவா்கள் முறையாகப் பயன்படுத்தி, நல்ல முறையில் படித்து உயா் கல்வியை அடைய வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மாணவா்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வழக்குரைஞா் முருகன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா், கிராம மக்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

அரசுப் பள்ளியில் கற்றல், கற்பித்தல் கண்காட்சி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


