தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் திருகல்யாண வைபவம்

சனிக்கவாடி மங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்று தரிசித்த பக்தா்கள்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:32 pm

போளூரை அடுத்த சனிக்கவாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

சனிக்கவாடி சந்திரமெளலீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு மலரபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்கள் பூ, பழவகைகள் சீா்வரிசையாக ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

பின்னா், கோயில் வளாகத்தில் ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில், சனிக்கவாடி, போளூா், கொரால்பாக்கம், பெலாசூா், பாடகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். இரவு வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.