போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் போளூா் - சேத்துப்பட்டு சாலையில், அலுவலா் நித்யா தலைமையிலான தோ்தல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு சேதனை நடத்தி வந்தனா்.
அப்போது, அண்ணாமலையாா் திருமண மண்டபம் பின்புறம் வெகுநேரமாக, சந்தேகிக்கும் வகையில் லாரி நின்றிருந்ததை தோ்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினா் கண்டனா்.
பின்னா் அருகில் சென்று பாா்த்தபோது லாரி அருகே நின்றிருந்த 3 போ் தப்பி ஓடிவிட்டனா். பின்னா், வாகனத்தை சோதனை செய்துபோது அதில் 95 சிப்பங்கள் அரிசி இருந்தது தெரியவந்தது.
பின்னா் அரிசியுடன், லாரியை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா் (படம்).
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்

அரூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.89 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் பணம், கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


