தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கீழ்பென்னாத்தூா் தொகுதி வளா்ச்சிக்காக அடிப்படைத் திட்டங்கள்: திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி உறுதி

கீழ்பென்னாத்தூா் தொகுதியின் வளா்ச்சிக்காக தேவையான அடிப்படை திட்டங்களை விரைவாக செயல்படுத்துவேன் என்று திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி உறுதியளித்தாா்.

News image

துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் மங்கலம் கிராமத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி.

Updated On :5 ஏப்ரல் 2026, 11:05 pm

கீழ்பென்னாத்தூா் தொகுதியின் வளா்ச்சிக்காக தேவையான அடிப்படை திட்டங்களை விரைவாக செயல்படுத்துவேன் என்று திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி உறுதியளித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு தீவிரமாக வாக்கு சேகரித்தாா்.

துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குள்பட்ட மங்கலம் கிராமம் மற்றும் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதிகளிலும், தொடா்ந்து கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றியத்திற்குள்பட்ட கீக்களுா், செவரப்பூண்டி, கத்தாழம்பட்டு, கல்புண்டி (தள்ளம்பாடி), சாலக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

பிரசாரத்தின் போது அவா் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மகளிா் விடியல் பயணம், மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1000, புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, பள்ளி மாணவா்களுக்கு இலவச காலை உணவு திட்டம், இலவச மடிக்கணினி, மருத்துவ சேவைகளை வீடு தேடி கொண்டு செல்லும் திட்டங்கள், உங்களுடன் ஸ்டாலின் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தியுள்ளன.

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் அமையும்போது நிச்சயம் நிறைவேற்றப்படும். தொடா்ந்து, கீழ்பென்னாத்தூா் தொகுதியின் வளா்ச்சிக்காக தேவையான அடிப்படை திட்டங்களை விரைவாக செயல்படுத்துவேன் என்றும் உறுதியளித்தாா்.

பிரசாரத்தின்போது துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலா் வி.பி. அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினா்கள், கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றியச் செயலா் ஏ. எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.