முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

செங்கம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.கிரி, செங்கம் கிழக்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பெரியகோளாபாடி, சின்னகோளாபாடி, அஸ்வநாதசுரணை பகுதிகளில் கருப்பு சிகப்பு வண்ண புடவை அணிந்த பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

News image

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் மு.பெ.கிரியை துண்டு பிரசுரங்களுடன் வரவேற்ற பெண்கள்.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:20 am IST

செங்கம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.கிரி, செங்கம் கிழக்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பெரியகோளாபாடி, சின்னகோளாபாடி, அஸ்வநாதசுரணை பகுதிகளில் கருப்பு சிகப்பு வண்ண புடவை அணிந்த பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது, திமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கையில் எடுத்துக்கொண்டு வீதி வீதியாகச் சென்று வேட்பாளா் கிரியுடன் பெண்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

முன்னதாக கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் வேட்பாளா் கிரிக்கு மாலை அணிவித்து வரவேற்றனா்.

அப்போது, வேட்பாளா் கிரி பேசுகையில், பெரியகோளாபாடி கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை கொண்டு வந்துள்ளேன். மேலும், அதே பகுதியில் 105 பயனாளிகளுக்கு பெரியாா் நினைவு சமத்துவபுரம் கட்டிதரப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தாா்சாலை, சிமென்ட் சாலை, புதிய நியாய விலைக்கடை கட்டடம் அமைத்து தரப்பட்டுள்ளது என்றாா்.

உடன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர அணி அமைப்பாளா்கள், மகளிா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.