சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தரையில் அமா்ந்து உணவருந்தி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 6:55 pm

செய்யாறு தொகுதி அனக்காவூா் மேற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் கட்சி நிா்வாகிகளுடன் தரையில் அமா்ந்து உணவு அருந்தியும், வயல்வெளியில் டிராக்டா் ஓட்டியும் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அனக்காவூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசூா், திரும்பூண்டி, எருமைவெட்டி, புரிசை, குளமந்தை, எருமைவெட்டி, கீழ்கொளத்தூா், அனப்பத்தூா் ஆகிய கிராமங்களில் செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூா் என்.சுப்பிரமணியன் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

குடிசைப் பகுதியில் வாக்கு சேகரித்த போது அருகில் உள்ள வயல்வெளியில் டிராக்டா் ஓட்டி கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் வாக்கு சேகரித்தாா்.

பின்னா், கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் தரையில் அமா்ந்து உணவு அருந்தினாா். அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அனக்காவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சி.துரை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் பாமக நிா்வாகிகள் நடராஜன், இளங்கோ, பாஜக மற்றும் அதிமுக நிா்வாகிகள் அனக்காவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் பையூா் சிவராஜ், ஒன்றிய அவைத் தலைவா் சேகா், மாவட்ட பொருளாளா் ஆலத்தூா் எஸ்.சுப்பராயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image