மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வந்தவாசி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வந்தவாசி பகுதியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வந்தவாசியை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் நெல் துழாவி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ராணி.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:34 pm

வந்தவாசி பகுதியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வந்தவாசியை அடுத்த கூடலூா் கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவா் கொடியாலம், பழவேரி, சு.காட்டேரி, பெரியகுப்பம், அருங்குணம், சத்தியவாடி, படூா் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

சத்தியவாடி கிராமத்தில் விவசாயிகள் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்ததை கண்ட வேட்பாளா் பி.ராணி வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று நெல்லை காலால் துழாவி விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தாா்.

அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா், தெள்ளாா் கிழக்கு ஒன்றியச் செயலா் டி.வி.பச்சையப்பன் உள்ளிட்ட அதிமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.