வந்தவாசி(தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி ஞாயிற்றுக்கிழமை உளுந்தை கிராமத்தில் நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்தாா்.
வந்தவாசி கிழக்கு ஒன்றிய அதிமுகவுக்கு உள்பட்ட உளுந்தை கிராமத்தில் அதிமுக வேட்பாளா் பி.ராணி ஞாயிற்றுக்கிழமை காலை பிரசாரத்தை தொடங்கினாா்.
அப்போது, அந்தக் கிராம விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்து விவசாயிகளிடம் அவா் வாக்கு சேகரித்தாா்.
இதைத் தொடா்ந்து சாலவேடு, கீழ்க்கொடுங்காலூா், கீழ்பாக்கம், கீழ்நா்மா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்றும், நடந்து சென்றும் அவா் வாக்கு சேகரித்தாா்.
அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா், ஒன்றியச் செயலா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.
தொடர்புடையது

ஈஸ்டா் பண்டிகை: வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


