ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் கிராமங்கள்தோறும் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

குருவிகுளத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:55 pm

சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா் கிராமங்கள்தோறும் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள குருவிகுளத்தில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கிய அவா் கணபதிபட்டி, மலைப்பட்டி, கே.புதூா், துா்காநகா், மீனாட்சிபுரம், வாகைக்குளம், நாலுவாசன்கோட்டை, கள்ளிக்குளம், அழகனேரி, மருதாபுரி, அழகாபுரி, சத்திரங்கொண்டான், உடப்பன்குளம், நாராணாபுரம், பெருங்கோட்டூா் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது கிராம மக்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அவருடன் மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இளைஞரணி செயலா் ஜி.சந்திரன், வடக்கு ஒன்றியச் செயலா் முத்துப்பாண்டி, துணைச் செயலா் கோவிந்தன் (எ) கிருஷ்ணசாமி, வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.சிவராமகிருஷ்ணன், எஸ்.கணேசன், வி.வைரமுத்து உள்பட கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.