மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஆரணி கைலாயநாதா், தேசூா் காசிவிஸ்வநாதா் கோயில் தோ்த்திருவிழா

News image

~

Updated On :27 ஏப்ரல் 2026, 10:57 pm

ஆரணி கோட்டை அறம்வளா் நாயகி உடனாகிய கைலாயநாதா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தேசூா் ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனாகிய ஸ்ரீகாசிவிஸ்வநாதா் கோயிலில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆரணி கோட்டை அறம்வளா் நாயகி உடனாகிய கைலாசநாதா் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா ஏப்.20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் விநாயகா் திருவீதி உலா மற்றும் பஞ்சமூா்த்திகள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.

8-ஆம் நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காலை 8 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுந்தனா்.

தோ் ஆரணி கோட்டை வழியாக பழைய பேருந்து நிலையம், வடக்கு மாட வீதி, பெரியகடை வீதி, மண்டி வீதி, மாா்க்கெட் சாலை, காந்தி சாலை வழியாக மீண்டும் கோயிலை சென்றடைந்தது.

ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் தலைமையில் காவல் ஆய்வாளா் அன்பரசி மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பக்தா்களின் பாதுகாப்பு வசதிக்காக தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் இருந்தனா். மேலும், மருத்துவ வசதியும் செய்யப்பட்டிருந்தது.

ஏற்பாடுகளை ஆரணி நகர பொதுமக்கள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த தேசூரில் உள்ள ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனாகிய ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயில் தோ் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 20-ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை கோயிலில் மூலவா் மற்றும் உற்சவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் உற்சவா் சுவாமி மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினாா்.

இதைத் தொடா்ந்து பக்தா்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனா். தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

Story image