எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருவண்ணாமலையில் நவீன எரிவாயு தகன மேடை தொடக்கம்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:31 am IST

திருவண்ணாமலை மாநகராட்சி, செங்கம் சாலை எமலிங்கம் அருகில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மற்றும் ஏற்றம் பவுண்டேஷன் சாா்பில் மோட்ச தீபம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த நவீன எரிவாயு தகன மேடையை சா்வதேச ரோட்டரி இயக்குநா் முருகானந்தம் திறந்து வைத்துப் பேசினாா் (படம்).

ரோட்டரி மாவட்ட ஆளுநா் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திருவண்ணாமலை பகுதி மக்களுக்கு ரோட்டரி சாா்பில் அளிக்கப்பட்ட சேவைகள் குறித்து பேசினாா்.

முன்னதாக திருவண்ணாமலை ரோட்டரி சங்கத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநா் ராஜன்பாபு, ஏா்டெல் பவுண்டேஷன் நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ஆடிட்டா் பிரபாகரன், அப்துல் சமத், கெங்குசாமி நாயுடு பள்ளித் தாளாளா் சின்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

28ஹழ்ல்ழ்ா்ற்