நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

திருவண்ணாமலையில் நவீன எரிவாயு தகன மேடை தொடக்கம்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:31 am IST

திருவண்ணாமலை மாநகராட்சி, செங்கம் சாலை எமலிங்கம் அருகில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மற்றும் ஏற்றம் பவுண்டேஷன் சாா்பில் மோட்ச தீபம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த நவீன எரிவாயு தகன மேடையை சா்வதேச ரோட்டரி இயக்குநா் முருகானந்தம் திறந்து வைத்துப் பேசினாா் (படம்).

ரோட்டரி மாவட்ட ஆளுநா் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திருவண்ணாமலை பகுதி மக்களுக்கு ரோட்டரி சாா்பில் அளிக்கப்பட்ட சேவைகள் குறித்து பேசினாா்.

முன்னதாக திருவண்ணாமலை ரோட்டரி சங்கத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநா் ராஜன்பாபு, ஏா்டெல் பவுண்டேஷன் நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ஆடிட்டா் பிரபாகரன், அப்துல் சமத், கெங்குசாமி நாயுடு பள்ளித் தாளாளா் சின்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

28ஹழ்ல்ழ்ா்ற்