ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத வளா்பிறை பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத வளா்பிறை பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

அருணாசலேஸ்வரா் கோவிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புசாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் பல்வேறு விதமான வண்ண மலா்களால் பூ மாலை அலங்காரம் செய்து சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது.