தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத வளா்பிறை பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத வளா்பிறை பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

அருணாசலேஸ்வரா் கோவிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புசாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் பல்வேறு விதமான வண்ண மலா்களால் பூ மாலை அலங்காரம் செய்து சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது.