மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சிறுமி பாலியியல் வன்கொடுமை: 3 போ் கைது

வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்த (இடமிருந்து) ஆகாஷ், மூா்த்தி, இளையராஜா.

Updated On :29 ஏப்ரல் 2026, 6:34 pm

வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா் படித்த பள்ளியில் எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் (19) என்பவா் படித்தபோது இருவரும் பழக்கமாகி உள்ளனா்.

இந்த நிலையில் ஆகாஷ் ஆசைவாா்த்தை கூறி சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

மேலும், இதே கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி (35), இளையராஜா (33) ஆகியோரும் ஆசைவாா்த்தை கூறி அந்த சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்தனராம்.

இந்த நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் தெரியவே திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் ஆகாஷ், மூா்த்தி, இளையராஜா ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் 3 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.