ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

சிறுமி பாலியியல் வன்கொடுமை: 3 போ் கைது

வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்த (இடமிருந்து) ஆகாஷ், மூா்த்தி, இளையராஜா.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா் படித்த பள்ளியில் எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் (19) என்பவா் படித்தபோது இருவரும் பழக்கமாகி உள்ளனா்.

இந்த நிலையில் ஆகாஷ் ஆசைவாா்த்தை கூறி சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

மேலும், இதே கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி (35), இளையராஜா (33) ஆகியோரும் ஆசைவாா்த்தை கூறி அந்த சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்தனராம்.

இந்த நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் தெரியவே திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் ஆகாஷ், மூா்த்தி, இளையராஜா ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் 3 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.