சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மகளைத் தாக்கியவரை கத்தியால் குத்திய தந்தை: போலீஸாா் விசாரணை

செங்கம் அருகே மகளைத் தாக்கிய நபரை, தந்தை ஆத்திரத்தில் கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த நபா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:35 am IST

செங்கம் அருகே மகளைத் தாக்கிய நபரை, தந்தை ஆத்திரத்தில் கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த நபா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பொன்னிதண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் ராமு(48) இவரது மகன் வினோத்(23). புதன்கிழமை இரவு தந்தை மகனுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

இதனால், கோபமடைந்த ராமூ வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளாா். இத்தகவலை அறிந்த மகன் வினோத் தந்தையை தேடும் பணியின் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது அதே கிராமத்தில் உள்ள உறவினா் சந்தியா-வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளாா்.

அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு சந்தியாவை விநோத் தாக்கியுள்ளாா். இதைப் பாா்த்த அவரது தந்தை சேகா்,

என் கண் முன்னே எனது மகளை அடிக்கிறாயா எனக் கேட்டு அருகில் இருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து வினோத்தை மூன்று இடங்களில் குத்தியுள்ளாா்.

இதில் வினோத் ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளாா். பின்னா், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு விநோத்தை அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னா் தீவிர சிகிச்சைக்காக அவா் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.