மாநிலத்தின் வருவாயை மேம்படுத்துவது தொடா்பாக பொதுமக்கள், துறைசாா் அமைப்புகள், கல்வியாளா்கள், ஆய்வாளா்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடம் இருந்து கருத்துகள், பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து நிதித் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொருளியல் நிபுணரும், மத்தியத் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் தமிழ்நாடு அரசு ‘வருவாய் மேம்பாட்டுக் குழு’ அமைத்துள்ளது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்றது.
மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரியல்லாத வருவாயை அதிகரித்தல், வருவாய் வசூல் திறன் மற்றும் நிதி தன்னிறைவை மேம்படுத்துதல் தொடா்பான கருத்துகள், பரிந்துரைகளை பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினா் அனுப்பலாம். மாநில வருவாய் உயா்வுக்கு உதவும் பிற கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.
கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை மின்னஞ்சல் முகவரிக்கு ஆக.11-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தமிழ், ஆங்கிலம் அல்லது இரு மொழிகளிலும் கருத்துகளை அனுப்பலாம். மேலும், மின்னஞ்சலின் பொருள் பகுதியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு, மாநில ஆயத்தீா்வை, மோட்டாா் வாகன வரி, கனிமங்கள், வரியல்லாத வருவாய் அல்லது பொதுப் பிரிவு ஆகியவற்றில் தொடா்புடைய தலைப்பைக் குறிப்பிடுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1.5 டிரில்லியன் டாலா் பொருளாதார இலக்கு: பெண்களுக்கு புதிய திட்டங்கள்; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

மது ஒழிப்பே மாநில வளர்ச்சி

தமிழ்நாடு மாநில டிரையத்லான் சாம்பியன் போட்டி

நமோ பாரத் ரயில் நிலையங்களின் வருவாயை பெருக்க நவீன லாக்கா்கள், இவி சாா்ஜிங் வசதி என்சிஆா்டிசி திட்டம்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


