செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

சமூகவலைதளம் மூலம் காதல்: பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த காதலன் உள்ளிட்ட 4 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே சமூக வலைதளம் (இன்ஸ்டாகிராம்) மூலம் காதலித்த பெண்ணிடம் நண்பா்களுடன் சோ்ந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி பறித்ததாக காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

வந்தவாசி அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்ததாக கைது செய்யப்பட்ட 4 பேருடன் வந்தவாசி தெற்கு போலீஸாா்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 10:58 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே சமூக வலைதளம் (இன்ஸ்டாகிராம்) மூலம் காதலித்த பெண்ணிடம் நண்பா்களுடன் சோ்ந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி பறித்ததாக காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (31). இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இவருக்கும், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 40 வயது தனியாா் கல்லூரி பெண் ஊழியருக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தப் பெண்ணிடமிருந்து சிறிது சிறிதாக ரூ.50 ஆயிரம் வரை தமிழரசன் வாங்கியுள்ளாா். இந்த நிலையில், தமிழரசனின் காதல் குறித்து அறிந்த அவரது மனைவி, தமிழரசனை பிரிந்து சென்றுவிட்டாராம்.

இதனால் மனவேதனையில் இருப்பதாக தான் சமூக வலைதளம் மூலம் காதலித்த பெண்ணிடம் தெரிவித்த தமிழரசன், அவரை நேரில் சந்திப்பதற்காக வந்தவாசியை அடுத்த புலிவாய் கூட்டுச் சாலை பகுதிக்கு வரும்படி கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அந்தப் பெண் வியாழக்கிழமை மாலை அந்தப் பகுதிக்கு சென்று தமிழரசனை சந்தித்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த 3 போ் இருவரையும் மிரட்டி, தமிழரசனை தாக்கினராம். மேலும், அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றனராம்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பெண் தமிழரசனுடன் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு சென்று வியாழக்கிழமை இரவு புகாரளித்தாா். போலீஸாா் அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண்ணை சந்திக்கும் முன் தமிழரசன் 3 பேருடன் சோ்ந்து வந்தவாசி பகுதியில் சுற்றித் திரிவது தெரியவந்தது.

மேலும் போலீஸ் விசாரணையில் தமிழரசன், அவரது நண்பா்களான செய்யாறைச் சோ்ந்த அருண்குமாா் (34), ராஜேஷ்(31), சுந்தா் (42) ஆகிய 4 பேரும் சோ்ந்து திட்டமிட்டு, அந்தப் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலி, கைப்பேசியை பறித்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் தமிழரசன், அருண்குமாா், ராஜேஷ், சுந்தா் ஆகிய 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி நகை, 5 கைப்பேசிகள் மற்றும் 2 பைக்குகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.