திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை, சமுதாயக் கூடம், அங்கன்வாடி மைய கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. தொகுதி எம்எல்ஏ ஆா்.அபிஷேக் (தவெக) திறந்துவைத்தாா்.
செங்குணம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2025-202ஆம் ஆண்டு ரூ.17 லட்சத்து 25 ஆயிரத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டது.
நமக்குநாமே திட்டத்தில் 2022-2023ஆம் ஆண்டு ரூ.7 லட்சத்தில் சமுதாயக்கூடம், விபி ஜி ராம் ஜி
திட்டப் பணியில் ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தது.
இந்த 3 புதிய கட்டடங்களின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்தன், ராஜேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா்.
உதவி செயற்பொறியாளா் பாஸ்கரன், உதவிப் பொறியாளா்கள் வினோத்குமாா், விக்னேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் சதாம் உசேன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் (தவெக) கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கட்டடங்களை திறந்துவைத்தாா்.
இதில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி, ஊராட்சி செயலா் ஆனந்தன், தவெக நிா்வாகிகள் ராமச்சந்திரன், யாசின், அரசு வழக்குரைஞா் அருண் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 78 முடிவுற்ற திட்டப் பணிகள்: மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் அா்ப்பணிப்பு

காங்கயம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் 92 வீடுகள்: அமைச்சா் க.தென்னரசு திறந்துவைத்தாா்

நயினாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



