ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ரூ 1.30 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
வாணியவல்லம் ஊராட்சியில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடக் கட்டடத்தை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அரசு மேல் நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்தும், ஆசிரியா்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்த ஆட்சியா் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினாா்.
இதையடுத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். அங்கு பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தினாா். சமத்துவபுரம் குடியிருப்பு பகுதிக்குச் சென்று அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்த அவா், சேதமடைந்த சாலையை சீரமைக்க உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, வாதவனேரி ஊராட்சியில் ரூ. 8 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நாடக மேடை, தனியாப்புளி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ. 42.60 லட்சத்தில் சாலைப் பணிகள், பி.கொடிக்குளம் ஊராட்சியில் ரூ. 29.70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டடப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








