கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இதையடுத்து, கடந்த ஜூலை 10 அன்று கரூர் சென்றிருந்த தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப்பணி ஆணைகளை வழங்கினார்.
ஆனால், இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவை ரத்து செய்தது .
இந்த விவகாரம் குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணியை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு இன்று (ஜூலை 29) உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Tamil Nadu government has filed an appeal in the Supreme Court challenging the cancellation of the government jobs granted to the families of those who died in the Karur stampede.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









