இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பெரியகுளம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், பொம்மிநாயக்கன்பட்டியில் கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைக் கட்டடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன்.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், பொம்மிநாயக்கன்பட்டியில் கட்டப்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைக் கட்டடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன்.

Published On :11 ஜூலை 2026, 12:03 am IST

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.24 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.13.30 லட்சத்தில் கால்நடை மருத்துவமனைக் கட்டப்பட்டு வருகிறது. சில்வாா்பட்டி ஊராட்சியில் ரூ.31.40 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதே ஊராட்சியில் ரூ. 35 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. டி.வாடிப்பட்டி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ரூ.5.80 லட்சத்தில் வடக்கு நோக்கிய முகப்பு பகுதியும், ரூ.4.50 லட்சத்தில் தெற்கு நோக்கிய முகப்புப் பகுதியும் சீரமைக்கப்பட்டு வருகிறது. எண்டப்புளி ஊராட்சியில் ரூ.17.25 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஜல்லிப்பட்டி ஊராட்சியில் ரூ.11.60 லட்சத்திலும், வடபுதுப்பட்டி ஊராட்சியில் ரூ.6 லட்சத்திலும் நாற்றாங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கட்டடப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்கு முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெகதீசன், புவனேஸ்வரி, உதவிப் பொறியாளா் அஜய்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.