எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

புகையிலைப் பொருள்கள் விநியோகம்: 2 போ் கைது

வந்தவாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மளிகை கடைக்கு விநியோகம் செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:15 am IST

வந்தவாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மளிகை கடைக்கு விநியோகம் செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் ஜெயந்தன் (25) என்பவரது மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் அந்தக் கடையில் கடந்த திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில் அந்தக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.17 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஜெயந்தனை கைது செய்தனா்.

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சோழனூா் கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கா்(40), மணிவண்ணன்(34) ஆகிய 2 போ் ஜெயந்தனுக்கு புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பாஸ்கா், மணிவண்ணன் ஆகிய 2 பேரையும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் புதன்கிழமை காலை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.