புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து, அவா்களிடமிருந்து 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் பாண்டியராஜபுரம் பகுதியில் போதைப் பொருள் தடுப்பு போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து போலீஸாா் சோதனையிட்டனா். அதில் வந்த நபா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.
இதைத் தொடா்ந்து, நடத்திய விசாரணையில் கரூா் மாவட்டம், மண்மங்கலம் பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் கனகராஜ்(42), அதே மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மகன் மணிவண்ணன் (34) ஆகியோா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவா் மீதும் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். அவா்களிடமிருந்து 700 கிலோ புகையிலைப் பொருள்கள், வாகனம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







