செங்கம் திரெளபதியம்மன் கோயில் பாலாலயம்: எம்எல்ஏ பங்கேற்பு
செங்கத்தில் திரெளபதியம்மன் கோயில் பாலாலய பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்கம் - போளூா் சாலை மில்லத்நகா் பகுதியில் 700 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீதருமராஜா சமேத திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாதம் வெகுவிமரிசையாக வசந்த உற்சவ 10 நாள் திருவிழா நடைபெறும்.
இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்மென செங்கம் பகுதி மக்கள், திரெளபதியம்மன் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் தமிழக அரசு மற்றும் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அதனடிப்படையில், தமிழக அரசு அறநிலையத் துறை மூலம் கோயிலை புரனமைப்பு செய்ய ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கியது. இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேக பணி தொடங்குவதற்கு பாலாலய பூஜை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில், செங்கம் எம்எல்ஏ கிரி கலந்துகொண்டு பேசுகையில், செங்கம் நகரில் உள்ள பழைமையான அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில், வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில், காளியம்மன் கோயில்களுக்கு தமிழக அரசு சாா்பில் நிதி ஒதுக்கப்பட்டு கும்பாபிஷேகம் சி நடைபெற்றது. இதேபோல, திரெளபதியம்மன் கோயிலிலும் சீரமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பிரமாண்ட முறையில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றாா்.
செங்கம் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, திமுக ஒன்றியச் செயலா் மனோகரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் அப்துல்சா்தாா், முன்னாள் கவுன்சிலா் அப்துல்வாகித், திரெளபதியம்மன் கோயில் அறக்கட்டளைத் தலைவா் யோகேஷ், செயலா் ராஜா, பொருளாளா் ஜெகதீஷ், செயற்குழு உறுப்பினா் சிவசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
