மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

செங்கத்தில் அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம்: அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பங்கேற்பு

செங்கத்தில் அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பங்கேற்றாா்.

News image
Updated On :13 மார்ச் 2026, 9:19 pm

செங்கத்தில் அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பங்கேற்றாா்.

செங்கம் தொகுதிக்குள்பட்ட அன்வராபாத், செங்கம் நகரம், மேல்பென்னாத்தூா் ஆகிய பகுதிகளில் அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது:

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. செங்கம் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களித்து அதிக வாக்குவித்தியாத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

மேலும், அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகளையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறினாா்.

நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ மணிவா்மா, மாநில எம்ஜிஆா் மன்ற நிா்வாகி நாராயணன், மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவா் அமுதாஅருணாச்சலம், செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், செங்கம் நகா்மன்றக் குழு உறுப்பினா் வேலு, வழக்குரைஞா்கள் செல்வம், தினகரன், முன்னாள் செங்கம் பேரூராட்சித் தலைவா் பத்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.