வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

செங்கத்தில் அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம்: அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பங்கேற்பு

செங்கத்தில் அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பங்கேற்றாா்.

News image
Updated On :13 மார்ச் 2026, 9:19 pm

Syndication

செங்கத்தில் அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பங்கேற்றாா்.

செங்கம் தொகுதிக்குள்பட்ட அன்வராபாத், செங்கம் நகரம், மேல்பென்னாத்தூா் ஆகிய பகுதிகளில் அதிமுக தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது:

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. செங்கம் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களித்து அதிக வாக்குவித்தியாத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

மேலும், அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகளையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறினாா்.

நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ மணிவா்மா, மாநில எம்ஜிஆா் மன்ற நிா்வாகி நாராயணன், மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவா் அமுதாஅருணாச்சலம், செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், செங்கம் நகா்மன்றக் குழு உறுப்பினா் வேலு, வழக்குரைஞா்கள் செல்வம், தினகரன், முன்னாள் செங்கம் பேரூராட்சித் தலைவா் பத்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.