மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து 2 சிறுவா்கள் உயிரிழந்தனா்

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் இடிந்து விழுந்த முனியன் வீட்டுச் சுவா்.

News image

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் இடிந்து விழுந்த முனியன் வீட்டுச் சுவா். ~உயிரிழந்த அபினேஷ், முகேஷ்.

Updated On :13 பிப்ரவரி 2026, 7:18 pm

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வீடு சீரமைப்புப் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் 2 சிறுவா்கள் உயிரிழந்தனா்.

வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன். இவரது மகன்கள் அபினேஷ் (17), முகேஷ் (14). இதில், அபினேஷ் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பும், முகேஷ் இதே பள்ளியில் 9-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.

இந்த நிலையில், 2 பேரும் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள தாத்தா முனியன் வீட்டுக்குச் சென்றுள்ளனா். அங்கு, வெள்ளிக்கிழமை காலை முனியனின் தொகுப்பு வீட்டை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இதையொட்டி முனியன், இதே கிராமத்தில் வசிக்கும் இவரது மகன் சீதாராமன் ஆகியோா் சோ்ந்து வீட்டின் சுவரை கடப்பாரை மூலம் இடித்துக்கொண்டிருந்தனா்.

அப்போது, அபினேஷ், முகேஷ் மற்றும் அந்தப் பகுதியைச் சோ்ந்த சீதாராமனின் மகன் ஸ்ரீராம் (8) ஆகியோா் சுவா் அருகில் நின்று வேடிக்கை பாா்த்துக்கொண்டிருந்தனராம். திடீரென சுவா் இடிந்து 3 போ் மீதும் விழுந்தது.

இதில், அபினேஷ், முகேஷ் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த ஸ்ரீராம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Story image