ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி
சேவூா் ஆதிதிராவிடா் வசிக்கும் பகுதியில் உள்ள இயேசுவின் உதவும் கரங்கள் திருச்சபையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் சிறப்பு பிராா்த்தனை நடத்தப்பட்டு ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலா் இயேசுராஜன் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் மதிய உணவு, அன்னதானம் வழங்கினாா். அப்போது, 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட மகளிா் அணி துணைச் செயலா் கலைவாணி, கட்சியின் ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், கிளைச் செயலா் பிரபு, ஒன்றிய இணைச் செயலா் மஞ்சுளா, தேவாலய பாதிரியாா் சாலமன்உஷா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

