ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிதம்பரத்தில் இன்று அம்பேத்கா் மாளிகை அமைக்க அடிக்கல்

News image

சிதம்பரம் நந்தனாா் மடத்தில் கட்டப்படவுள்ள அம்பேத்கா் மாளிகையின் வரைபடம்.

Updated On :13 ஏப்ரல் 2026, 7:20 pm

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் ஆலய வளாகத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.14) காலை அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் தனது சொந்தச் செலவில் கல்விக் கழக உறுப்பினா்களின் ஆதரவுடன் அம்பேத்கா் மாளிகை கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளாா்.

நிகழ்ச்சியில் நந்தனாா் கல்விக்கழக உறுப்பினா் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி கலந்துகொண்டு கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுகிறாா்.

இதுகுறித்து நந்தனாா் கல்விக் கழகத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் கூறியதாவது: நந்தனாா் ஆலய வளாகத்தில் அம்பேத்கா் மாளிகை என்ற பெயரில் கட்டப்படும் பிரம்மாண்ட கட்டடத்தில் ஏழை, எளிய மாணவா்களுக்கு யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட அனைத்து அரசுத் தோ்வுகளுக்கும் கட்டணம் இல்லாமல் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இதேபோல, ஓமகுளத்தில் நந்தனாா் மடத்தில் நந்தனாா் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும், அனைத்து சமூகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவா்களும் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து உயா் கல்விக்கு செல்லும் வகையில், சிறப்பு கற்பித்தல், கல்வி ஊக்க பயிற்சிகள் அளிக்கப்படும்.

மேலும், இங்கு ஏழை, எளிய மக்கள் சுப காரியங்களை மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்திக்கொள்ளலாம். பெற்றோா்களை இழந்த ஏழை, எளிய இளம் பெண்களுக்கு திருமண உதவிகள் வழங்கபடும். படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் தொடங்க வழிகாட்டும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெறும் என்றாா்.