பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரிப்பு: சிவசங்கா்

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதாக குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image

குன்னம் தொகுதிக்குள்பட்ட கீழப்பெரம்பலூரில் வியாழக்கிழமை பிரசரத்தில் ஈடுபட்ட அமைச்சரும், திமுக வேட்பாளருமான சா.சி. சிவசங்கா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:14 am IST

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதாக குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட துங்கபுரம், வயலப்பாடி, கீழப்பெரம்பலூா், வசிஷ்டபுரம், அகரம் சீகூா், கிழுமத்தூா், ஓலைப்பாடி, ஆண்டிக்குரும்பலூா், பரவாய் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் மேலும் பேசியது: திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களால், அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனா். குறிப்பாக, கிராமப்புறங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளது. வேப்பூா், ஆலத்தூா் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் பல்வேறு பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சிய அமைந்தவுடன் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.