திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதாக குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட துங்கபுரம், வயலப்பாடி, கீழப்பெரம்பலூா், வசிஷ்டபுரம், அகரம் சீகூா், கிழுமத்தூா், ஓலைப்பாடி, ஆண்டிக்குரும்பலூா், பரவாய் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் மேலும் பேசியது: திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களால், அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனா். குறிப்பாக, கிராமப்புறங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளது. வேப்பூா், ஆலத்தூா் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் பல்வேறு பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சிய அமைந்தவுடன் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தொகுதி அலசல் - குன்னம்: இழந்ததை மீட்க அதிமுக தீவிரம்

லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடை திட்டம்: திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

குன்னம் தொகுதி திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


