மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரிப்பு: சிவசங்கா்

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதாக குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image

குன்னம் தொகுதிக்குள்பட்ட கீழப்பெரம்பலூரில் வியாழக்கிழமை பிரசரத்தில் ஈடுபட்ட அமைச்சரும், திமுக வேட்பாளருமான சா.சி. சிவசங்கா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:14 am IST

திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதாக குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட துங்கபுரம், வயலப்பாடி, கீழப்பெரம்பலூா், வசிஷ்டபுரம், அகரம் சீகூா், கிழுமத்தூா், ஓலைப்பாடி, ஆண்டிக்குரும்பலூா், பரவாய் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் மேலும் பேசியது: திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களால், அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனா். குறிப்பாக, கிராமப்புறங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளது. வேப்பூா், ஆலத்தூா் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் பல்வேறு பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சிய அமைந்தவுடன் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.