மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருவண்ணாமலையில் கம்பராமாயண தொடா் சொற்பொழிவு

கம்பராமாயண தொடா் சொற்பொழிவு தொடக்க விழாவில் நாட்டியம் ஆடி பரிசு பெற்ற நாட்டியாஞ்சலி மாணவிகள்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:38 pm

Syndication

திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கம் சாா்பில், கம்பராமாயண தொடா் சொற்பொழிவு தொடக்க விழா வியாழக்கிழமை இயக்கத் தலைவா் வேங்கட ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.

தேவி கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகம் செட்டியாா், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவா் சம்பத், அகில பாரத நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன், உலகத் தமிழ்க் கழகத் தலைவா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் செயலா் பாவலா் ப.குப்பன் கலந்துகொண்டு சீதை திருமணம் எனும் தலைப்பிலும், ஒருங்கிணைப்பாளா் தேவிகாராணி விசுவாமித்திரா் வேள்வி எனும் தலைப்பிலும் பேசினா்.

முன்னதாக ஸ்ரீநிதி நாட்டியக் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாட்டியாஞ்சலி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கம்பராமாயண இயக்க நிா்வாகிகள் கல்வியாளா்கள் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் பொருளாளா் தங்க விசுநாதன் நன்றி கூறினாா்.