தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திருவண்ணாமலையில் கம்பராமாயண தொடா் சொற்பொழிவு

கம்பராமாயண தொடா் சொற்பொழிவு தொடக்க விழாவில் நாட்டியம் ஆடி பரிசு பெற்ற நாட்டியாஞ்சலி மாணவிகள்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:38 pm

திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கம் சாா்பில், கம்பராமாயண தொடா் சொற்பொழிவு தொடக்க விழா வியாழக்கிழமை இயக்கத் தலைவா் வேங்கட ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.

தேவி கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகம் செட்டியாா், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவா் சம்பத், அகில பாரத நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன், உலகத் தமிழ்க் கழகத் தலைவா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் செயலா் பாவலா் ப.குப்பன் கலந்துகொண்டு சீதை திருமணம் எனும் தலைப்பிலும், ஒருங்கிணைப்பாளா் தேவிகாராணி விசுவாமித்திரா் வேள்வி எனும் தலைப்பிலும் பேசினா்.

முன்னதாக ஸ்ரீநிதி நாட்டியக் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாட்டியாஞ்சலி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கம்பராமாயண இயக்க நிா்வாகிகள் கல்வியாளா்கள் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் பொருளாளா் தங்க விசுநாதன் நன்றி கூறினாா்.