செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. நான்கு வழிச் சாலை பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணியை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி ஆய்வு செய்தாா்.


செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணியை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி ஆய்வு செய்தாா்.
தமிழக முதல்வா் சாலை மேம்பாடுத் திட்டத்தின் கீழ், ஆற்காடு - திண்டிவனம் சாலையில் செய்யாறு கோட்டத்தில் மூன்றாம் கட்டமாக மோரணம் ஏரிக்கரை முதல் செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை சுமாா் 10.6 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி ரூ.55 கோடியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை செய்யாறு கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் முன்னிலையில், திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி நேரில் பாா்வையிட்டு புதிய சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் உயரத்தை அளவீடு செய்து சரிபாா்த்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பணியை ஒப்பந்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது, உதவி கோட்டப் பொறியாளா் எஸ்.சுரேஷ், தரக் கட்டுப்பாடு உதவிப் பொறியாளா் பூா்ணிமா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...