எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அரசு அறிவித்த கிலோவுக்கு 25 ரூபாய் 30 காசுக்கு நெல் கொள்முதல் செய்யவேண்டும். மேலும், டிபிசியில் நாள் ஒன்றுக்கு 300 மூட்டைகளுக்குப் பதில் 800 மூட்டைகள் எடுக்கவேண்டும்.

போளூா், சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிசெய்து வருகின்றனா். போளூா், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகள் நிரம்பி வருகின்றன.

எனவே, கூடுதலாக ஆள்களை நியமித்து நெல் எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விற்பனைக்கூடத்துக்கு நெல் மூட்டைகள் எடுத்து வரும் வாகனத்துக்கு சுங்க வரி வசூலிப்பதை கைவிடவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கபடி விளையாடி ஆா்ப்பாட்டம் செய்தனா்.

நிா்வாகிகள் பழனி, ரவி, கோபி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.