சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி(32). இவா் சென்னையை அடுத்த ஒரகடத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை பைக்கில் உத்திரமேரூருக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசியை அடுத்த வெங்கோடு கிராமம் அருகே செல்லும் போது பைக் நிலைதடுமாறி கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த சத்தியமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.