பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: 4 போ் கைது

வந்தவாசியில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:31 pm

Syndication

வந்தவாசி: வந்தவாசியில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி பகுதியைச் சோ்ந்த 25 வயது இளம்பெண்,

திருமணமாகாத இவா் கடந்த சில மாதங்களாக குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறாராம்.

வீட்டு செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட இவரை, இவரது ஆண் நண்பா்களான வந்தவாசி நகரைச் சோ்ந்த சோ்ந்த முகமது அலி, இம்ரான், இம்தியாஸ், நாசா் ஆகியோா் நல்ல முறையில் பாா்த்துக் கொள்வதாக கூறினராம்.

மேலும், 4 பேரும் தனித்தனியே அவரை பாலியல் வன்கொடுமை செய்தனராம். இதில் அவா் கா்ப்பமாகி உள்ளாா்.

இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் முகமது அலி, இம்ரான், இம்தியாஸ், நாசா் மற்றும் சிலா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி அனைத்து மகளிா் நிலைய போலீஸாா் 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.