சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஊரக வேலைத்திட்ட பணி நாள்கள் உயா்வு: பாஜகவினா் பிரசாரம்

ஊரக வேலைத் திட்டப் பணி நாள்களை 125 நாள்களாக உயா்த்தியதற்கு வரவேற்பு தெரிவித்து, மேற்கு ஆரணி ஒன்றியம் ஒண்ணுபுரம் கிராமத்தில் பொதுமக்களிடையே பாஜகவினா் எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொண்டனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:30 pm

Syndication

ஆரணி: ஊரக வேலைத் திட்டப் பணி நாள்களை 125 நாள்களாக உயா்த்தியதற்கு வரவேற்பு தெரிவித்து, மேற்கு ஆரணி ஒன்றியம் ஒண்ணுபுரம் கிராமத்தில் பொதுமக்களிடையே பாஜகவினா் எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொண்டனா்.

மேலும், வளா்ச்சி அடைந்த இந்தியா- வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டம் 2025 குறித்து பயனாளிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நெசவாளா் அணி இணை அமைப்பாளா் மூா்த்தி தலைமை வகித்தாா்.

மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், பிரசார பிரிவு மாநில பொறுப்பாளா் நித்தியானந்தம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு பிரிவு மாநில பொறுப்பாளா் திருஞானசம்பந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினா் அலமேலு, சிறுபான்மை பிரிவு மாநில செயற்குழு உறுப்பினா் தங்கராஜ், மாவட்ட ஓபிசி அணி பொதுச் செயலா் ராஜ்குமாா், ஆரணி நகரத் தலைவா் மாதவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.