கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கத்தியை காட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 4 போ் கைது

வந்தவாசி அருகே கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 9:59 pm

Syndication

வந்தவாசி அருகே கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை சிலா் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்துவதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அங்கு விரைந்து சென்றனா்.

அங்கு கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த 4 பேரை போலீஸாா் பிடித்து, அவா்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாா் (23), வந்தவாசி இரட்டைவாடை செட்டித் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் (20), வந்தவாசி ராமசாமி உடையாா் தெருவைச் சோ்ந்த முருகன் (23), புன்னை கிராமத்தைச் சோ்ந்த சிவா (20) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து கத்திகளை பறிமுதல் செய்தனா்.