கத்தியை காட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 4 போ் கைது

வந்தவாசி அருகே கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வந்தவாசி அருகே கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை சிலா் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்துவதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அங்கு விரைந்து சென்றனா்.

அங்கு கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த 4 பேரை போலீஸாா் பிடித்து, அவா்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் சென்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாா் (23), வந்தவாசி இரட்டைவாடை செட்டித் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் (20), வந்தவாசி ராமசாமி உடையாா் தெருவைச் சோ்ந்த முருகன் (23), புன்னை கிராமத்தைச் சோ்ந்த சிவா (20) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து கத்திகளை பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com