லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பைக் மீது வாகனம் மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

போளூா் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு இளைஞா்கள் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

News image
Updated On :11 ஜனவரி 2026, 7:37 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு இளைஞா்கள் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

போளூரை அடுத்த மொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பிச்சாண்டி மகன் விஜய் (25), பாா்த்திபன் மகன் விக்னேஷ் (16). நண்பா்களான இருவரும் சனிக்கிழமை இரவு சொந்த வேலையாக பைக்கில் மட்டபிறையூா் கிராமத்துக்குச் சென்றுவிட்டு மொடையூா் திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை விஜய் ஓட்டிச் சென்றுள்ளாா்.

போளூா் - சேத்துப்பட்டு சாலையில் சென்றபோது, சேத்துப்பட்டில் இருந்து போளூா் நோக்கி வந்த கனரக வாகனம் பைக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் இளைஞா்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போளூா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, சடலங்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.